திங்கள், 11 ஏப்ரல், 2011

அந்த இரண்டு சொற்கள்

இரண்டு நாட்கள் முன் வரை கூட
நன்றியையும் மன்னிப்பையும் 
நாம் வெளிப்படுத்தியதே  இல்லை  


அந்தச் சொற்கள் இரண்டும் நமக்குள் 
அந்நியத்தை ஏற்படுத்துகிறது என்றாய் நீ.

ஆனால் நேற்று முன்தினம் உன் திருமணத்திற்காக 
என் காதலை துறக்க நான் சம்மதித்த பொழுது 
முதல் முறையாக  நன்றியையும் மன்னிப்பையும் 
மாறி மாறிக் கூறி என்னை நீ அந்நியப்படுத்தி  விட்டாய்.       


0 comments:

கருத்துரையிடுக

உங்கள் விமர்சனத்திற்கு நன்றி!

Related Posts Plugin for WordPress, Blogger...