சனி, 14 மே, 2011

கனவில் கடவுள்

 உறங்கிக் கொண்டிருந்த என் குழந்தை
கொஞ்சம் சிணுங்கியது.
உறக்கம் கலையாமலேயே புன்னகைத்தது.

காரணமே புரியாமல் குழந்தையை
உற்று நோக்கியபடியே இருந்த 
என்னைப் பார்த்து அம்மா சொன்னாள்.

குழந்தையின் கனவில் கடவுள் வந்து 
குழந்தையுடன் விளையாடுவரென்று.

நான் கேட்டேன் 'ஏனம்மா என்
கனவில் கடவுள் வருவதில்லை'

அம்மா சொன்னாள் கடவுள்
கள்ளம் கபடமில்லாதவர்களின் கனவில்
மட்டுமே வருவாரென்று.

அம்மா சொல்வது சரியாக இருக்குமோ?






0 comments:

கருத்துரையிடுக

உங்கள் விமர்சனத்திற்கு நன்றி!

Related Posts Plugin for WordPress, Blogger...