வியாழன், 31 மார்ச், 2011

ஏமாற்றும் காதல்

அன்பே ஆருயிரே 
எப்படி முடிந்தது உன்னால் 

நம் ஒரு வருடக் காதலை ஒரு நொடியில்
உதறித் தள்ள எப்படி முடிந்தது உன்னால் 

எப்படிப்பட்டக்  காதல் இது!!

கண்ணியமான காதலுக்கு எல்லை வகுத்து 
சராசரிக் காதலின் மரபை உடைத்தோமே.

இது சராசரிக் காதல் அல்ல என்று எத்தனையோ முறை 
கூறிய நீயே இன்று இந்தக்  காதலை உதறி சராசரி ஆக்கி விட்டாய்.

பெற்றோர்களுக்காக  ஒளிந்து மறைந்து காதலித்தோமே அன்றி 
நம் காதலுக்குள் ஒளிவு மறைவு இருந்ததில்லை 

கரங்கள் கோர்த்து எத்தனையோ விஷயங்களைப் பற்றி 
நாம் சூடாக விவாதித்ததுண்டு 

விலகி நின்று வேடிக்கையாய் பேசியதுமுண்டு

முத்தத்திற்கு கூட முன் அனுமதி வாங்கித்தானே செயல்படுத்தினேன் 

காதலில் பிரிதல் என்பது பெண்ணிடம் காதலை சொல்வதை விடக்  கடினமானது.

உலகில் அனைத்துமே மாற்றங்களுக்குட்பட்டது  என்று கூறுவார்கள்.
ஆம் உன் காதல் உட்பட.

எனக்கு உன்னை பிடித்ததற்கும் உனக்கு என்னை பிடிக்காததர்க்கும்
இப்பொழுது வரை காரணம் பிடிபட வில்லை என் கண்மணியே.

இப்போது நான் என் செய்வது?

இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு
பிறக்க போகும் மகளுக்கு உன் பெயரை வைக்கச் சொல்கிறாயா?

மன்னிக்க வேண்டும் என் முன்னாள் காதலியே

எனக்கும் வேறு வேலைகள் உண்டு.




    






திங்கள், 28 மார்ச், 2011

எங்கேயும் அழுக்கு


இங்கு லஞ்சம் வாங்குபவனுக்கும் கூச்சமில்லை
கொடுப்பவனுக்கும்  கூச்சமில்லை

வாங்காமல் இருப்பவனுக்கும் வலை விரிக்கபடுகிறது
அவனையும் கூட்டுக் களவாணி ஆக்க

மக்களின் தேவை அறிந்து மக்களையும் ஊழலுக்குள்
இழுத்து விட்டதுதான் இருபத்தியோரம் நூற்றாண்டில் 
நாம் செய்த புதுமை

மொத்த மக்கள் தொகையில் ஏறத்தாழ  முப்பத்தைந்து சதவிதம்
ஒரு வேளை சாப்பாடுக்கே வழியில்லாமல் கஷ்டப்படுகிறது - புள்ளி விவரம்

கருப்பு பணம் வைத்திருக்கும் நாடுகளின் பட்டியலில்
இந்தியாவுக்கு கிடைத்திருப்பது முதலிடம்


ஊழல் தங்களை பாதிக்காத வரையில்
ஊழல் ஒரு பிரச்சனையில்லை மேல் தட்டு மக்களுக்கு

ஊழல் தங்கள் வாழ்க்கையை பாதித்தாலும் ஊழலை எதிர்த்து போராட முடியாமல் தினப்படி பிழைப்பைத் தேடும் கீழ்த் தட்டு மக்கள்

ஊழலைப் பற்றி படித்து ஊழலுக்கு எதிராக  வீட்டுக்குளேயே
கோஷமிட்டு வீட்டுக்குளேயே  முடங்கி போகிறது நடுத்தர வர்க்கம்

பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாக 

ஏழைகள் மேலும் ஏழைகளாக


இந்தியா இப்படி ஒரு பக்கமாக  வளர்ச்சி அடைகிறது

இங்கு நடக்கும் ஊழல்களை பட்டியலிட்டால்
முற்றும் என்று போடமுடியாமல் தொடர வேண்டி வரும்.

வாழ்க இந்திய ஜனநாயகம்.








 










 
























வியாழன், 17 மார்ச், 2011

எது சிறந்தது ?



வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கையில்


எது சிறந்தது


புறப்பட்டேன் சிலரை கேட்க


எதிரே தென்பட்ட ஆஸ்பத்திரியில் நுழைந்து
சற்று முன்னரே குழந்தை பெற்றவளிடம் கேட்டேன்


அவள்  சொன்னாள் ' இது போன்ற தருணத்திற்காக காத்திருப்பதுதான்'


அடுத்தவனிடம் பணம் பெற்றவனை பார்த்து கேட்டேன்


கடன் வாங்கமலேயே இருப்பதுதான் சிறந்தது என்றான் அவன்.


காதலிக்காக காத்திருப்பதே சிறந்தது என்று வேறொருவன் சொன்னான்


வேலை தேடி அலையும் ஒருவனை கேட்ட போது பொழுது  கல்லூரியில் படித்த காலம் மட்டுமே சிறந்தது என்றான்


 எதிர்வரும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை கேட்ட போது
போட்ட பணத்தை ஒரே வருடத்தில் அள்ளுவதே சிறந்தது என்றார்


ஆளுங்கட்சியின் சார்பாக  போட்டியிடும் வேட்பாளரை கேட்ட போது
எப்பொழுதும் ஆளுங்கட்சியாகவே இருப்பதுதான் சிறந்தது என்றார்


சிறிது நாட்களுக்கு முன் திருமணம் முடித்த ஒருவர் நண்பர்களுடன் சுற்றித் திரிந்த காலமே  சிறந்தது என்றார்


முதியவரை கேட்ட பொழுது  குழந்தையாய்    இருப்பதே
சிறந்தது என்றார்


மரணிக்கும் தறுவாயில் இருக்கும் ஒரு பெரியவரை பார்த்து கேட்ட பொழுது பிறக்காமலே இருப்பதுதான் சிறந்தது என்றார்.











Related Posts Plugin for WordPress, Blogger...