வியாழன், 31 மார்ச், 2011

ஏமாற்றும் காதல்

அன்பே ஆருயிரே 
எப்படி முடிந்தது உன்னால் 

நம் ஒரு வருடக் காதலை ஒரு நொடியில்
உதறித் தள்ள எப்படி முடிந்தது உன்னால் 

எப்படிப்பட்டக்  காதல் இது!!

கண்ணியமான காதலுக்கு எல்லை வகுத்து 
சராசரிக் காதலின் மரபை உடைத்தோமே.

இது சராசரிக் காதல் அல்ல என்று எத்தனையோ முறை 
கூறிய நீயே இன்று இந்தக்  காதலை உதறி சராசரி ஆக்கி விட்டாய்.

பெற்றோர்களுக்காக  ஒளிந்து மறைந்து காதலித்தோமே அன்றி 
நம் காதலுக்குள் ஒளிவு மறைவு இருந்ததில்லை 

கரங்கள் கோர்த்து எத்தனையோ விஷயங்களைப் பற்றி 
நாம் சூடாக விவாதித்ததுண்டு 

விலகி நின்று வேடிக்கையாய் பேசியதுமுண்டு

முத்தத்திற்கு கூட முன் அனுமதி வாங்கித்தானே செயல்படுத்தினேன் 

காதலில் பிரிதல் என்பது பெண்ணிடம் காதலை சொல்வதை விடக்  கடினமானது.

உலகில் அனைத்துமே மாற்றங்களுக்குட்பட்டது  என்று கூறுவார்கள்.
ஆம் உன் காதல் உட்பட.

எனக்கு உன்னை பிடித்ததற்கும் உனக்கு என்னை பிடிக்காததர்க்கும்
இப்பொழுது வரை காரணம் பிடிபட வில்லை என் கண்மணியே.

இப்போது நான் என் செய்வது?

இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு
பிறக்க போகும் மகளுக்கு உன் பெயரை வைக்கச் சொல்கிறாயா?

மன்னிக்க வேண்டும் என் முன்னாள் காதலியே

எனக்கும் வேறு வேலைகள் உண்டு.




    






1 comments:

Unknown சொன்னது…

//// மன்னிக்க வேண்டும் என் முன்னாள் காதலியே

எனக்கும் வேறு வேலைகள் உண்டு. /// enakum veru velaigal unndu nu solletu... marupadeyoum aavalukakha poem yeluthe ireukeinga? any how.. nice...

கருத்துரையிடுக

உங்கள் விமர்சனத்திற்கு நன்றி!

Related Posts Plugin for WordPress, Blogger...