திங்கள், 28 மார்ச், 2011

எங்கேயும் அழுக்கு


இங்கு லஞ்சம் வாங்குபவனுக்கும் கூச்சமில்லை
கொடுப்பவனுக்கும்  கூச்சமில்லை

வாங்காமல் இருப்பவனுக்கும் வலை விரிக்கபடுகிறது
அவனையும் கூட்டுக் களவாணி ஆக்க

மக்களின் தேவை அறிந்து மக்களையும் ஊழலுக்குள்
இழுத்து விட்டதுதான் இருபத்தியோரம் நூற்றாண்டில் 
நாம் செய்த புதுமை

மொத்த மக்கள் தொகையில் ஏறத்தாழ  முப்பத்தைந்து சதவிதம்
ஒரு வேளை சாப்பாடுக்கே வழியில்லாமல் கஷ்டப்படுகிறது - புள்ளி விவரம்

கருப்பு பணம் வைத்திருக்கும் நாடுகளின் பட்டியலில்
இந்தியாவுக்கு கிடைத்திருப்பது முதலிடம்


ஊழல் தங்களை பாதிக்காத வரையில்
ஊழல் ஒரு பிரச்சனையில்லை மேல் தட்டு மக்களுக்கு

ஊழல் தங்கள் வாழ்க்கையை பாதித்தாலும் ஊழலை எதிர்த்து போராட முடியாமல் தினப்படி பிழைப்பைத் தேடும் கீழ்த் தட்டு மக்கள்

ஊழலைப் பற்றி படித்து ஊழலுக்கு எதிராக  வீட்டுக்குளேயே
கோஷமிட்டு வீட்டுக்குளேயே  முடங்கி போகிறது நடுத்தர வர்க்கம்

பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாக 

ஏழைகள் மேலும் ஏழைகளாக


இந்தியா இப்படி ஒரு பக்கமாக  வளர்ச்சி அடைகிறது

இங்கு நடக்கும் ஊழல்களை பட்டியலிட்டால்
முற்றும் என்று போடமுடியாமல் தொடர வேண்டி வரும்.

வாழ்க இந்திய ஜனநாயகம்.








 










 
























0 comments:

கருத்துரையிடுக

உங்கள் விமர்சனத்திற்கு நன்றி!

Related Posts Plugin for WordPress, Blogger...