வியாழன், 17 மார்ச், 2011

எது சிறந்தது ?



வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கையில்


எது சிறந்தது


புறப்பட்டேன் சிலரை கேட்க


எதிரே தென்பட்ட ஆஸ்பத்திரியில் நுழைந்து
சற்று முன்னரே குழந்தை பெற்றவளிடம் கேட்டேன்


அவள்  சொன்னாள் ' இது போன்ற தருணத்திற்காக காத்திருப்பதுதான்'


அடுத்தவனிடம் பணம் பெற்றவனை பார்த்து கேட்டேன்


கடன் வாங்கமலேயே இருப்பதுதான் சிறந்தது என்றான் அவன்.


காதலிக்காக காத்திருப்பதே சிறந்தது என்று வேறொருவன் சொன்னான்


வேலை தேடி அலையும் ஒருவனை கேட்ட போது பொழுது  கல்லூரியில் படித்த காலம் மட்டுமே சிறந்தது என்றான்


 எதிர்வரும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை கேட்ட போது
போட்ட பணத்தை ஒரே வருடத்தில் அள்ளுவதே சிறந்தது என்றார்


ஆளுங்கட்சியின் சார்பாக  போட்டியிடும் வேட்பாளரை கேட்ட போது
எப்பொழுதும் ஆளுங்கட்சியாகவே இருப்பதுதான் சிறந்தது என்றார்


சிறிது நாட்களுக்கு முன் திருமணம் முடித்த ஒருவர் நண்பர்களுடன் சுற்றித் திரிந்த காலமே  சிறந்தது என்றார்


முதியவரை கேட்ட பொழுது  குழந்தையாய்    இருப்பதே
சிறந்தது என்றார்


மரணிக்கும் தறுவாயில் இருக்கும் ஒரு பெரியவரை பார்த்து கேட்ட பொழுது பிறக்காமலே இருப்பதுதான் சிறந்தது என்றார்.











1 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

நல்ல கவிதை...

புதிய முயற்ச்சி..

கருத்துரையிடுக

உங்கள் விமர்சனத்திற்கு நன்றி!

Related Posts Plugin for WordPress, Blogger...