திங்கள், 27 செப்டம்பர், 2010

காதல் பாடம்

அவளை அலுவலகத்தில் முதல் நாள்
பார்த்ததில் இருந்தே அவன் 
பசி மறந்தான்          
தூக்கம் தொலைத்தான்

 விடுப்பே எடுக்காமல் அவனுடைய
அலுவலக நாட்கள் கரைந்தன.

அவள் விடுப்பில் சென்ற பொழுது
அவளைக் காண முடியாமல் அவன் கண்கள் மட்டுமல்ல இதயமும்  கனத்தது.

அவள் ஓரக் கண்ணால் அவனைப்  பார்த்து
புன்னகையை வீசிய போதெல்லாம்
அவன் இதயம் ஒவ்வொரு முறையும் கீழே நழுவியது.

மதிய உணவை இருவரும் பங்கிட்டுக் கொண்டபோது
 இது போன்றதொரு உன்னதமான காதல் உலகில் இல்லை
என்று அவனுக்குளேயே கூறிக் கொண்டான்

அவளை  இருசக்கர வாகனத்தில் 
பின்னால் உட்காரவைத்து நகரை 
வலம் வந்த போது
காதல் அவனை இன்னும்
கொஞ்சம்  இளைஞனாக்கியது.
   
அவளை நினைத்து உருகி கவிதைகள் 
எழுதிய போது காதல் அவனை  கவிஞனாக்கியது

தெருவில் நடந்த சண்டையை விலக்கி
சமாதனம் செய்த போது காதல் அவனை
சமுதாயத்தின் காவலானக்கியது.

அதே தெருவில் மறுநாள் அவளை சீண்டிய இருவரிடம் 
அவன் சண்டையிட்ட  போது காதல் அவனை வீரானக்கியது

 திடீரென்று  அலுவலகத்தில் ஒரு நாள் அவள்
 திருமண அழைப்பிதழை  நீட்டிய போது
அவன் அதிர்ச்சியுடன் வாழ்த்துக்களைக் கூறி
 கழிவறைக்குள்  போய் தாழிட்டுக்கொண்டு
  ' ஒ'வென்று அழுதான்.

காதல் இன்று அவனை கோழையாக்கியது 

0 comments:

கருத்துரையிடுக

உங்கள் விமர்சனத்திற்கு நன்றி!

Related Posts Plugin for WordPress, Blogger...