இன்று காலை அவளை பூங்காவில்
நடைப் பயிற்சியின் போது பார்த்தேன்.
பிடித்திருந்தது.
அவளிடம் சொன்னேன் 'ஐ லவ் யு '
பிறகு சொல்வதாய் சொன்னாள் அவள் முடிவை.
ஆனால் அன்று மாலையே வந்தது அவள்
சம்மதம் அலைபேசியில் குறுஞ்செய்தியாக
அதற்குப் பிறகு இரண்டு வாரத்தில் திருமணம்.
மூன்றாம் மாதத்திற்குப் பின் காதல் கசந்தது.
எனக்கு அவளையும் அவளுக்கு என்னையும் பிடிக்கவில்லை
ஒற்றுமையாக விவாகரத்துக் கோரி
ஒரு வருடத்தில் பிரிந்தோம்.
செவ்வாய், 7 செப்டம்பர், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
2 comments:
நல்லாயிருக்குங்க கவிதை... உண்மையும் கூட...
வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதவும்...
கருத்துரையிடுக
உங்கள் விமர்சனத்திற்கு நன்றி!