நேற்று படித்த கவிதை ஞாபகம் வர சட்டென்று
என் காதலியிடம் கேட்டேன் "உன்னைப் பற்றி கவிதை சொல்லவா" என்று
அவளும் "ம்" என்றாள் ஆர்வத்துடன்.
நான் தொடங்கினேன்
உன் முகம் முழு நிலவு போன்றது
புருவம் பிறை நிலா
கண்கள் மீன்களுக்குச் சமம்
உன் பார்வையோ கதிர் வீச்சு
கழுத்து வெண் சங்கு போலுள்ளது
பற்களோ முத்து
சொற்களோ தேன்
மொத்தத்தில் உன் அழகுக்கு நிகரேது
முடித்துவிட்டு அவளையே பார்த்தேன்
அவள் என் தலை முடியை கோதிவிட்டு கூறினாள்
"ச்சீ போடா லூசு"
திங்கள், 6 செப்டம்பர், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக
உங்கள் விமர்சனத்திற்கு நன்றி!