திங்கள், 13 செப்டம்பர், 2010

இளமைக் கனவு

அவள் என் கரம் பற்றி  இழுத்துச் சென்று
என் கண்களை உற்று நோக்கி என்னை "காதலிக்கிறேன்" என்றாள்
என் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.
வார்த்தைகளில் நிரப்ப முடியாத சந்தோஷம்.
என் சம்மதத்தை புன்னகையாக தெரிவித்தேன்.

பின் மீண்டும் அவளை சந்தித்தபோது
எப்போது திருமணம் என்றேன்
இரண்டு நாட்களில் என்றாள்.
மீண்டும் நான் வானத்தில் பறந்தேன்.

 சுற்றத்தார் சூழ மேள தாளத்துடன் மண்டபம் பரபரக்க
வெட்கத்துடன் அவள்
தாலியை  கையில் வைத்துக்கொண்டு நான்
அப்பா சட்டென்று என்னை உலுக்கி "மணி ஆவுது எழுந்திரு" என்றார்

நான் கடிகாரம் பார்த்தேன் மணி ஆறு
இது கனவா ?
பரவாயில்லை இருக்கட்டும் .
ஒரு சந்தேகம். இந்தக் கனவு பலிக்குமா?


 

0 comments:

கருத்துரையிடுக

உங்கள் விமர்சனத்திற்கு நன்றி!

Related Posts Plugin for WordPress, Blogger...