வியாழன், 26 மே, 2011

காதல் படும் பாடு


உன் மேல் காதல் கொண்டு உன்னிடம் 
கூறிய பொழுது சட்டென்று சம்மதித்தாய் 

அடுத்து வந்த தினங்களில் உனக்கு பிடித்ததெல்லாம் 
எனக்கும் பிடித்தது


கனவுகளில்   மிதந்தேன்

உற்சாகத்தில் உறக்கம் தொலைத்தேன்

கவிதை எழுதி காதல் கிறுக்கன் ஆனேன்.


உனக்காக வானத்தை ரெண்டாக  கிழிப்பேன் 
மின்னலைப் பிடிப்பேன் என்று வாக்கு கொடுத்தேன்.

அதற்குப் பிறகு 

உன் அலுவலகம் உன்  வீடு என மாறி மாறி  இரு சக்கர
வாகனத்தை  இயக்கிய  போது உனக்காக முழு நேர 
ஒட்டுனராகிப் போனேன்.

உன்னை நினைத்து சாப்பிடாமல் என் உடல்  மெலிந்ததோ  தெரியாது
ஆனால் உனக்காக செலவு செய்து  என் பணப் பை இளைத்து விட்டது.


உன் வீட்டு சில்லறை செலவுகளுக்குக் கூட
என் மாத சம்பளத்தில் பட்ஜெட்.


காதல் இப்பொழுது என்னை செலவாளி ஆக்கிவிட்டது.

இது அத்தனையும்  காதல் என்ற பெயரில்.



எஜமானியாய் நீ

உன் குரலுக்கு ஓடோடி வரும் சேவகனாய் நான் 

அனைத்தும் எனக்கும் தெரியும்  

ஆனால் இதை தட்டி கேட்க முடியாமல் 
ஏதோ  ஒன்று என்னை தடுக்கிறது.

அது  உன்மேல் நான்  வைத்திருக்கும் காதல் தானே என் கண்மணி.
 
 




 
 
  

4 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

நன்றாக இருக்கிறது..

சக்தி கல்வி மையம் சொன்னது…

கலக்கல் நண்பா..
வாழ்த்துக்கள்..

முரளிநாராயணன் சொன்னது…

நன்றி திரு.வேடந்தாங்கல் கருண்

Unknown சொன்னது…

bro konjam loosuthano neenga

கருத்துரையிடுக

உங்கள் விமர்சனத்திற்கு நன்றி!

Related Posts Plugin for WordPress, Blogger...