புதன், 15 செப்டம்பர், 2010

வாழ்க்கை

என் காதலை சொல்லியபோது வீட்டிற்குள்
உள்நாட்டுப் போரே ஏற்பட்டது போன்ற ஒரு பிரமை

அப்பா கோபத்தில் எகிறி குதித்ததில்
வானத்திற்கும் பூமிக்குமான இடைவெளி
அதிகரித்துப் போனது

என் காதலின் உறுதி தெரிந்து என்
உடமைகளுடன் நானும் வெளியேற்றப்பட்டபோது
அம்மா கதறி அழுதாள்.

சங்கடத்துடன் வெளியே வந்து
காதலியை தேடி ஓடி 
உடனடியாகத் திருமணம் என்றேன்.

சற்று  தயங்கி பின்னர் ஒப்புக் கொண்டாள்

ஓடுகாலிகள் என்ற பட்டத்தை தாங்கி
வாடகைக்கு வீடு பிடித்து
சந்தோஷத்தை இழந்து குடி புகுந்தோம்

வருடம் ஒன்று உருண்டு விட்ட நிலையில்
என் மனைவி பிரசிவிக்கப் போகும்
குழந்தையைக்  காண அம்மாவும் அப்பாவும்
ஓடி வந்தனர்.

பிறக்கப்  போவது பேரனா பேத்தியா
அம்மாவுக்கும் அப்பாவுக்கும் இடையில் விவாதம்

'ஒரு பேரனோ பேத்தியோ பொறந்துட்டா 
எல்லாத்தையும்  மறந்துடுவாங்க'  

பக்கத்துக்கு வீட்டுக்காரர் எப்பொழுதோ
சொன்னது நினைவுக்கு வந்தது.






  

1 comments:

VELU.G சொன்னது…

உண்மைதாங்க

நல்லாயிருக்குங்க கவிதை

கருத்துரையிடுக

உங்கள் விமர்சனத்திற்கு நன்றி!

Related Posts Plugin for WordPress, Blogger...